புதன், ஆகஸ்ட் 17, 2016

கதவு திறக்க

கதவு திறக்க வேண்டி காத்திருக்கிறார்கள்
பணிநிமித்தம் சென்றவர்க்காக
பணியை நிமித்தமாக
சொல்லிச் சென்றவர்க்காக
நண்பரோடு கதைத்துத்
திரும்புகிறவருக்காக
மதுக்குவளைகளை சரித்துத்
திரும்புகிறவர்களுக்காக
ஏமாற்றங்களைச் சுமந்து
எங்கோ திரிந்தலைந்து
வருபவருக்காக
கலைந்த தலையை அள்ளி முடிந்தபடி
கதவு திறக்கும் அன்பின் கனம் தெரியாதவர்க்கும் 

கதவு திறக்கக் காத்திருக்கிறார்கள்
அடுத்து
உணவுத்தாலத்தோடு திரும்புவார்கள்
தட்டிலிருப்பது
வெறும் சோறு என்றே நினைப்பவர்களுக்காகவும்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...