புதன், ஆகஸ்ட் 17, 2016

நீல புத்தன்

பேசிக்கொண்டிருக்கப் பிரியப்படும்
மனிதர்கள் அருகிருக்கையில்
மௌனம் கொண்ட வாழ்வு
பேருந்தின் சன்னலோரக் காற்றில் முடிபறக்க
எவரோ போகும் காட்சி
ஏனோ தவிப்பைப் பெருக்குகிறது
ஓடிப்போய்த் தொற்றிக்கொள்ள
படி காட்டாப் பேருந்துகளல்லவா கடந்துகொண்டிருக்கின்றன

*********************************************************************
எப்படியாவது மாறிவிடும் என்று
நினைத்திருக்கிறீர்கள்
எப்படியாவது கைவிட்டுவிடலாம் என்று
காத்திருக்கிறீர்கள்
மாறுவதும் கைவிடுவதும் 
நீங்கள் செய்துமுடிக்க வல்லதல்ல
என்பதைப் புரிந்துகொள்ளும்போது
நீண்டபாதையின் தாழ்வாரங்கள்
ஒழுகத் தொடங்கிவிடுகின்றன
கதவுகளோ
இறுகத்தாழிட்டுத் துருவேறி

**********************************************************************
கையகப்படுத்தியதெல்லாம் வாழ்வின் துளியுமல்ல
ஏந்திய பசுங்கிளை
மெல்ல நகர்ந்தபோது அறியாய்
பிரம்மாண்ட வேர்பிடித்துவிட்ட
இத்தருணமே உணர்கிறாய்
நிலவின் கிரணங்களைப் பார்க்கலாம் அந்த வேரடியில்
கிடந்து
போதாதோ


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...