வியாழன், செப்டம்பர் 22, 2016

நீங்கள் உங்களைப் போலில்லை

ஏதோ செய்துவிடப்போவதான
நம்பிக்கையில்தான் வாழ்கிறோம்
எதையுமே செய்துவிடவில்லை
என்பது புரிந்தாலும்
இனியாவது
ஏதோ செய்துவிடப்போவதான
நம்பிக்கைதான்
எவ்வளவு உவப்பாகஇருக்கிறது
உப்புபோட மறந்துபோன
சாம்பாரில்
பரிமாறலுக்குமுன் கலந்துவிடுவதுபோல்
ஏதாவது செய்துவிட முடிந்தாலாவது......
நம்பிக்கைகள் எளிமையானவை மட்டுமல்ல
கொடுமையானவையும்
****************************************************************
காத்திருத்தல் எவ்வளவு கடினமானது
காலகாலமாகச் சொல்லப்பட்ட
உதாரணங்களாலும்
அனுபவத்தாலும் அறிந்திருக்கிறோம்
எங்கெங்கோ காத்திருப்பவர்களின்
எதிர்பார்ப்புக்கு மாறாக
காத்திருப்பின் சுவையை உணராமல்
எவரோ கரைந்துகொண்டிருக்கிறார்கள்
முறையின்றி
*****************************************************************
யாரைப் போலிருக்கிறீர்கள்
என்று யாராவது சொல்லிக்கொண்டே
இருப்பார்கள்
உங்களைப்போல் இருப்பதாக
எப்போது சொல்வார்களோ என்று
காத்திருந்து காத்திருந்து
இப்போது
நீங்களே உங்களைப் போலில்லை
*************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...