புதன், அக்டோபர் 26, 2016

எண்ணால் கட்டியது

ஒவ்வொரு வீட்டுக்கும்
ஒரு அடையாளம் இருந்தது
தொழிலாலோ,தோற்றத்தாலோ,
பூர்வீகத்தாலோ
அடைமொழி சூட்டி
அழைத்துக் கொண்டிருந்தோம்
கட்டிட மாற்றங்கள் கூட காரணிகளாகும்
புதுவீடு,மாடிவீடு என
ஒன்றுபோல இரண்டிருந்தால்
பிள்ளைகளால் பேர் சொன்னோம்
எங்கள் ஊர் அஞ்சல்காரரும் 
எண்களை எழுத்தில் மட்டுமே பார்ப்பார்
அடுக்கிவைத்த தீப்பெட்டிகளில்
குடியேறியபின் எண்ணே கண்ணானது
ஒன்று கூடினாலும் குறைந்தாலும்
போகுமிடம் சேரமாட்டீர்
கறாராய்க் குறியுங்கள்
இப்படியாரும் இங்கில்லையென
அடுத்த கதவின் இடுக்கும் முறைக்கும்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...