செவ்வாய், அக்டோபர் 04, 2016

பெயரிலாக் குளங்களும் பெயருள்ள மீன்களும்

எந்தக் குளத்தில் 
நீந்திக் கிடக்கிறோமென 
மீன்கள் அறிவதில்லை.
நீங்கள் வைக்கும் பெயரையோ
செய்யும் அசுத்தத்தையோ
பொருட்படுத்தாமல்
வாழ்வதை விளையாட்டாகவே தொடர்கின்றன
முறையிடுவதுமில்லை
கிளர்ச்சிசெய்வதுமில்லை
உங்கள்தூண்டிலில்
அல்லது ஒருபறவையின் அலகில்
சிக்கும்வரை



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...