புதன், அக்டோபர் 26, 2016

விளக்கிற்கு வெளியிலிருக்கும் பூதங்கள்

விளக்கிலே திரி நன்கு சமைந்தது
 எனக்கவிஞன் எழுதியதெல்லாம் 
தெரியாமல் 
என் முன்னோடிப்பெண்டிர் 
அரிக்கன் விளக்கு,அடுப்படிப்பிறை விளக்கு
நல்ல விளக்கு,வாசற்பிறை அகல்
காடா விளக்கு, கண்ணாடிக்கூண்டிட்ட
இரவுவிளக்கு எனப்பார்த்து பார்த்து 
தேய்ப்பதும் திரிப்பதும் 
துடைப்பதுமாகவே 
வாழ்ந்தபோதும் 
விளக்கேத்த வந்தவளாக மட்டுமே இருந்து 
ஒளியை உணராது போயினர்
புளியும்,மண்ணும்,சாம்பலுமாக
அவர்கள்
தேய்த்த தேய்ப்பிற்கு நியாயமாக
ஒருமுறை கூட விளக்கிலிருந்து

 பூதம் வரவில்லை
வெளியிலே உலவிய பூதங்களுக்கு 

இவர்களன்றோ அடிமைகள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...