வெள்ளி, அக்டோபர் 14, 2016

காலம் தப்பிய காலம்

ஆகாயத்தின் நிறம்
 மாற்றியே தீருவேன் என 
உதைத்துக்கொண்டு அழுதிருக்கலாம்
எதிரிலிருப்பவர் கையில் 
என்ன இருக்கிறது என கூச்சப்படாமல்
காட்டச்சொல்லியிருக்கலாம்
பொம்மைகளை 
விட்டுக்கொடுக்காது காத்திருக்கலாம்
பூச்சிக்கும் பாம்புக்கும் 
பெரிய வித்தியாசம் தெரிந்திருக்காது
முக்கியமாக
எப்போதும் ஒரேமாதிரி 

சிரிக்கவும் அழவும் முடிந்திருக்கும்
என்ன செய்ய
குழந்தையாக இருப்பது 

குறுகிய காலத்துக்கே அனுமதிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...