வெள்ளி, அக்டோபர் 14, 2016

செதுக்க முடியாதவை

இரண்டுநிமிடங்கள் முன்னதாக
 உன் அழைப்பு வந்து நின்றதாக 
அலைபேசி சொல்கிறது
இரண்டு நிமிடங்களுக்கு முன்
இங்கேயே இருந்ததாக மனசும் அறிவும் 
சேர்ந்தே சொல்கிறது
கேட்டதா கேட்கவில்லையா
கேட்பாய்


இரண்டு நிமிடத்துக்குமுன்
என்ன நடந்ததென்று மறந்து போகிறதே
இந்த வரலாறு எப்படித்தான் எழுதப்படும்


எவ்வளவைத்தான் தஞ்சாவூர்க்
கல்வெட்டில் செதுக்கி வைப்பது


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...