புதன், அக்டோபர் 26, 2016

கருணையின் அடையாளம்

மரணத்தைக்கண்டு அஞ்சவேண்டாம்
மரணத்தை இகழவேண்டாம்
மரணத்தின் கரங்கள்
கருணை மிக்கவை
உங்களையும்
என்னையும்
நாம் போற்றும் கடவுளையும் விட 
கருணை மிக்கவை
தீர்க்க முடியாதவை என்று 
நீங்களும் நானும் நமது கடவுளும்
கைவிட்டவற்றை
தீர்த்து வைப்பதைவிட 
வேறென்ன கருணை இருக்க முடியும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...