செவ்வாய், அக்டோபர் 04, 2016

நாளையும் பூக்கும்

அல்லித்தண்டுகளின் இடையிடையே
பாசியும் நிழலுமாக கலங்கித்தெளிகிறது
குளம்
நாளையும் பூக்கும்

*****************************************
எத்தனை மருகினாலும்
அதே சூரியன்அதே சந்திரன்
அதே குற்றங்கள்


*****************************************
நீலத்தைத்துளி துளியாய் எடுத்து கோர்த்தாயிற்று.
ஆயிற்றா
நட்சத்திரத்தை ஒவ்வொன்றாய்
தைத்தாயிற்று
ஆயிற்றா
நிலவைச் சுருக்கம் நீக்கி
ஒட்டியாயிற்று
ஆயிற்றா
சரி உங்கள் வேலை முடிந்தது
போங்கள்
வெயில் வழிந்துகொண்டிருக்கிறது

*****************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...