திங்கள், ஏப்ரல் 17, 2017

இலையுதிர்கால புத்தன்

நியாயமான அன்பு
நியாயமான மரியாதை
நியாயமான அனுகூலம்
நியாயமான அங்கீகாரம்
நியாயமான சேவை
நியாயமான கவனம்
நியாயமான புன்னகை
எதுவுமே நெருங்கவில்லை
அநியாயமான ஒவ்வொன்றையும்
நியாயமான ஒன்றாக்கிடும்
திறமையில்லை தானே
அநியாயமான வெம்பலோடு
செத்துப்போங்கள்
அதுவே இவ்வுலக நியாயம்

****************************************************

புத்தன் உறங்கிக்கிடக்கிறான்
இலையுதிர்கால மரத்தடியில்
கனவில் தளிராடியதே
போதுமாயிருக்கிறது


*****************************************************
நீதான் என்ற உறுதிப்படுத்தலுக்கு முன்பே முடித்துவிட்டது
நீயோ என்ற ஐயம்

*****************************
விழுவதற்கென்றே காத்திருப்பவர்களிடம்
கையசைத்தவாறே எழுவதான ஞானம் 
சித்திக்கட்டும்\

*************************************
பாதையை மறிப்பதாக
இழுத்துக் கொத்தாக்கி
கட்டிவைத்த இடுக்கிலிருந்து
முண்டி வெளிவந்து
சிரிக்கிறது ஒற்றை அரளி


***********************************************************
ஊஞ்சல் பார்க்கும்போது
மனசு கூட ஆடவில்லை
மட்டப்பாறையாகி விட்ட
அதோடு இனி என்ன செய்ய




வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...