வியாழன், ஆகஸ்ட் 31, 2017

பகீரதப் பிரயத்தனம்

நீங்கள் இருப்பதை நீங்கள் உணர
யாரையாவது அச்சுறுத்த வேண்டியிருக்கிறது
கண்ணுக்கருகே ஆடும்
கடப்பாறையைப் பாராதது
போல 
பயத்தை விழுங்க வேண்டியிருக்கிறது
எவர் சிரித்தாலும் திடுக்கிட
வேண்டியிருக்கிறது
எவர் கதறுகையிலும்
பஞ்சுமிட்டாய் சாப்பிட வேண்டியிருக்கிறது
பூமியே நழுவினாலும் ஆடாதமாதிரி 

நிற்க வேண்டியிருக்கிறது
எப்போதும் எவருடைய உணவையோ 


உணர்வையோ
களவாட வேண்டியிருக்கிறது
பாவமாகத்தான் இருக்கிறது
எவருக்கோ நடக்கும்வரை....




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...