வியாழன், ஆகஸ்ட் 31, 2017

சாலையோர அங்காளம்மை

பூச்சொரிதல் ஏற்பாடுகளின் 
தடபுடலைப் பார்த்தபடி சிரித்திருக்கிறாள் 
ஆற்றோர வெள்ளந்தாங்கி அம்மை
மணல் லாரிகளைக் காத்திருக்கும் இப்போதும்
அதே பெயர்
அசௌகரியமா இல்லையா 
எனத்தெரியவில்லை

*******************************************
வீசிப்போகும் காணிக்கைகளின் டங்டிங் ஒலியோடு
தனித்திருக்கும்
சாலையோரக்
கொட்டகையின் அங்காளம்மைக்கு
இளநீர்க்குலைகளோடு வாசலில் கடைவிரிக்க 
செல்லம்மை வந்தால்தான்
மனுஷவாசம்
செல்லம்மை 

அரிவாள் வீசும் அழகைப் பார்த்து
ரசிக்கும்போது சிந்திய புன்னகைதான் 

உறைந்து கிடக்கிறது அங்காளி சூலி முகத்தில்


********************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...