செவ்வாய், நவம்பர் 21, 2017

வீட்டுக்குப் போகும் வழி


நாம் வீட்டுக்குப் போகும் வழியில்
இரண்டு அல்லிக் குளங்கள்
ஒரு ஆறு 
கொண்டையன் வாய்க்கால் ஆற்றில் சேர்த்தியா
என்ற சந்தேகமும் இருந்தது
பாதையோரப் புளியமரங்களின் முதற்குத்தகை
நமக்கு
கொடுக்காப்புளி.,அருநெல்லி,
நாவற்பழத்துக்கு சற்றே பாதை விலகியும்
நடையிலும் ஓட்டத்திலும் சேர்த்தியிலா போக்கில்
சிதறாது சேகரிக்க முந்தி வேண்டியே
முந்திப்போட்ட தாவணிகள்
திடீர் பாண்டி கட்டங்கள் 
நேரமிழுத்தபோதும்
அம்மையர் புலம்பவில்லை
குட் டச் பேட் டச் தெரியாத தடிக்கழுதை என்று
வாசலில் வண்டி ஏற்றி கம்பிச் சிறையிலிருந்து
கட்டிடச் சிறைக்கு இடம் மாறித் திரும்பும்
ஏழுவயதுப் பெண்ணிடம் 
எப்படியும் சொல்லிவிடவேண்டும்
இவ்வார விடுமுறையில்
என்ன இருந்தாலும்
காலில் முள் படாத நாகரீக காலம் இது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...