வெள்ளி, டிசம்பர் 01, 2017

உதிரி செவ்வந்தி

உதிரி செவ்வந்தியை இட்டு 
கமலம் 
வரைந்த வாசலைத் தயக்கத்துடன் 
சாய்ந்து சாய்ந்து நனைக்கிறது மழை 
திருநாள் எங்கபோகுது 
நா எங்க போறேன் 
அட இந்த உதிரி செவ்வந்தியும்தான் 
எங்க போகுது
நீ வா தாராளமா
மழையிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்
அவள்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...