வியாழன், ஜூன் 14, 2018

2017 டிசம்பர் 25

எப்படியும் உதிரத்தான் போகிறது 
என்ற சமாதானம் எடுபடவில்லை 
வலுக்கட்டாயமாக நீளும் கிளையை 
ஒடிக்கும்போது 

எவரையும் எதையும் விடுவதில்லை 
எல்லைக் கோடுகள்

**********************************************************

வரிசை மாறாமல் நிற்கத் தெரியாத 
நட்சத்திரக் கூட்டத்தைக் 
கட்டி மேய்க்க வாய்க்கிற 
குளிர் முன்னிரவுக்கு 
தனி மணம் 
சுற்றிலும் எந்தக் கொடியும் செடியும் 
ஆடா இடத்திலும் 
ம்



********************************************************

சிலுசிலுவென்று வீசும் காற்று
நின்று பார்த்துப் போகிறது
எரிந்தும் எரியாத மனசை
சுடர் சுடுமா ஒளிருமா
என விளங்காது 
புறப்பட்டபோது அதற்கும் வியர்ப்புதான்


*****************************************************
நில்லென்று சொல்கையில் நிற்கவும் 
செல்லென்று சொல்கையில் தொடரவும் 
செய்யலாம்தான் 
வேறென்ன செய்வதென யோசியாது 
திருகவும் நிறுத்தவுமான 
பொம்மையாக சிந்தை மாற்றி
சாவியை உன் கையளித்தால்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...