வியாழன், ஜூன் 14, 2018

நீர்த்தடம்

மேலிருந்து காண்பவர் சுமையின் கனம் அறியார்
நடையின் தொலைவறியார்
வலியின் தளர்வறியார்
உடன் நடக்கவும் சுமக்கவுமான 
துணையிலா நெடும்பயணம்
பழகிய பாதையில் அனிச்சையாய்
நடப்பவளுக்கும்
உழைப்பின் உயர்வு கோஷமெல்லாம் தெரியாது
அவள் அறிந்ததெல்லாம் நீர்த்தடம் தேடியலைதலொன்றே


படம் RAVI PALET

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...