சனி, ஜூன் 16, 2018

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

நேசத்துக்கு விளக்கவுரையை
அவள் ரத்தத்தால் எழுதும் 
சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன்
வெம்பும் வாழ்வுகளைப்பற்றி
ஒருநாள் பேசிக்கலைவோம்
கல்லெறிதலின் களைப்புத்தீர
நகைத்துமுடிக்க
பெண்ணுடல்
பெண்ணுறுப்பு
பெண்ணுயிர்
எதையாவது பேசுங்கள்
நாளையும் ஆயிரம் ஆயிரம்
பெண்கள் வாசல் தாண்டி
வருவார்
உங்கள் பார்வையால்
பழிச்சொல்லால்
இழிசொல்லால்
வல்லாங்கால்
சிறுமை சேர்க்காத அறிவு
சித்திக்கட்டும் உமக்கு
இது வினோதினிகளின்
அஸ்வினிகளின்
ஆராயிகளின் ...
....... தவித்த குரல்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...