வியாழன், ஜூன் 14, 2018

கிருஷ்ணனும் ருக்மிணியுமானவர்கள்

சில பொம்மைகள் வேண்டும்
இப்படிப்பேசாதே
இப்படி உளறாதே
இப்படித் திருடாதே
இப்படி புறவழி செல்லாதே 
இப்படி மனதறிந்து பொய்யுரைக்காதே
என்று நீங்கள் சொல்ல விரும்புவதையெல்லாம்
சொல்ல
சில பொம்மைகள் வேண்டும்
குறிப்பாக
உங்களை மாற்ற முயலாத அளவில்
எங்கு கிடைக்கும்?


**********************************************************

பூக்கள் உதிர்ந்தன
இலைகள் உதிர்ந்தன
மீண்டு வருவனவற்றின் 

சாட்சியாய் நிற்பவற்றை விரும்பாத ஊரின் நடுவே
நிற்கத்தான் செய்கின்றன
மொட்டை மரங்கள்


******************************************************

எருக்கம்பூக்கள் கொத்து கொத்தாய்
 மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தன
சூடியிருந்த மயிற்பீலியை எடுத்துக்
காதுகுடைந்து கொண்டிருந்தான்
கிருஷ்ணன் 
தன் பீதாம்பர நிறத்துக்கு
எருக்கு பொருந்தலாமென்ற ஆவலில்
வளைத்துப் பறிக்கச் சொல்கிறாள் ருக்மிணி

கிழிந்த கொசுவ மறைப்பு நகர்ந்த எரிச்சலில்
ஓங்கிய கையோடு துரத்துகிறான்
ஒரு குவளை தேநீருக்கு வழியிலா
நகரின்
அடுத்த சந்து திரும்பிவிட்டது
அவர்கள் கிருஷ்ணனும் ருக்மிணியுமாகினர்


படம்-இணையம் 




வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...