ஞாயிறு, அக்டோபர் 14, 2018

எதை எடுத்தாலும் பத்து

வானம் அத்தனை கறுப்பாகி விலக்கினாலும்
வெட்கங்கெட்ட விண்மீன்கள் 
பெயரையும் மாற்றுவதில்லை 
ஊரையும் மாற்றுவதில்லை

**********************************************************************
வண்ண வண்ணமாக
நிறைந்திருக்கிறது
சந்து முழுக்க
"எதையெடுத்தாலும் பத்து"
அங்காளியைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு
இந்தக் கூட்டத்தில்தான் கலந்திருக்கிறான் 
குடல்பலியாகப் போகிறவன்
வீட்டுக்குக் கொடுத்தனுப்பிவிட்டு
படுகளம் வந்து சேர்வானென
சூலத்தைக் கிடப்பிலிட்டு
விரித்த தலையை 
சற்றே ஆற்றிக்கொண்டிருக்கிறாள் அங்காளி

**********************************************************************
கடைசிப்பேருந்தையும்
தவறவிட்டுக் காத்திருக்கிறான் ஈசன்
காலந்தோறும் இப்படித்தான் 
எங்கோ நின்றுவிடுகிறேன்
எனப் புலம்பிவிட்டு
அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டான்
"பெருமைக்கொண்ணும் கொறச்சலில்ல.... காலபைரவனுக்கு "
அசரீரியாய்க்கேட்கிறது சங்கரி குரல்
அப்படியொன்றும் இல்லாதபோதும்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...