ஞாயிறு, அக்டோபர் 14, 2018

உடைந்தது

உங்கள் தெருவிலும்
கேட்டிருக்குமே
உங்கள் மூதாதைக்
காலத்தின் நீலத்தில்
வானத்தை மாற்றுபவன் குரல்
அதற்கு முன்னர் வந்தானா
பின்னரா
கடலை மாற்றுகிறவன்
உடைந்தது எதுவாயினும் பற்றவைப்பேனென்று
நேற்று ஒருவன் கூவியது கேட்டீரோ

என் அம்மை 
மனசைக் கையிலெடுத்துக்கொண்டு 
வாயிலுக்கும் உள்ளுக்குமாக
நடந்துகொண்டிருக்கிறாள்
வந்தால் சொல்லுங்கள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...