செவ்வாய், அக்டோபர் 23, 2018

சரிகை புல்லாக்கு மினுங்க

செல்லாத்தா செல்ல மாரியாத்தா 
மிதந்து கொண்டிருக்கிறது பந்தலில்
திருவிழா வரிசையில் வாங்கிய
புளியோதரைத் தொன்னையைத் 
தலைநடுங்க நிற்கும் மாரிக்கிழவியிடம் 
கையளித்துவிட்டு
ஒருநிமிடம் நின்று
அரைஞாண்கயிற்றில் காற்சட்டை ஏற்றியபின் 
வரிசைக்கு மீளும் அப்புவைப் 
பார்த்துதான் சரிகை புல்லாக்கு மினுங்க 
புன்னகைத்தாள் கழுத்துமாரி
அதை எல்லார் ஈஸ்வரி பார்த்துவிட்டார் போல
இந்தக் கண்களிருந்து என்ன பயனென்று 
சொல்லடி நீயாத்தா
தேர்முட்டி தாண்டி எதிரொலிக்கிறது

காமதேனு அக்டோபர் 1 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...