செவ்வாய், அக்டோபர் 23, 2018

இரட்டைப் பின்னலுக்கு நடுவே தொங்கும் தைரியம்

கண்ணாடிக்குவளை சிலுங்கென விழுந்து நொறுங்கியது
பொறுக்கித் திரட்டியாயிற்று
குப்பையில் விழுந்த சிலுங்கும்
தரையின் சிலுங்கும் 
ராகதாளம் ஒன்றேயா
முன்பின் எங்கும் கீச்சாத பரிசீலனை
வேறெதுவும் தோன்றவில்லை


********************************************************
பை பத்திரமா
மண்ணா
செடியா
வேரா
கிளையா
துளிர்த்துக்கொண்டிருந்த குட்டிமல்லியா
ஏறத்துடித்த அவரையா
எதை விசாரிக்க
எதையும் கவனித்ததில்லை 

எல்லாம் தரையிலிருந்தபோது
****************************************************************
தலைக்குப்பின்னால் போய்விழுந்த ஓட்டுச்சில் 
சரியாகத்தான் விழுந்திருக்குமென்ற 
ஊகத்தில் குதிக்கும்போதும்
தைரியம்
இரட்டைப்பின்னலுக்கு நடுவே
மல்லிச்சரமாகத் தொங்கிக்கொண்டிருந்தது
மல்லி கதம்பமானாலும் 

கனகாம்பரமானாலும் அதே




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...