செவ்வாய், அக்டோபர் 23, 2018

மனக்கொடி

மெல்லிய கோடுகளுக்கிடையிலோ 
சின்னப் புள்ளிகளுக்கிடையிலோ 
பரப்பாத வண்ணம் 
அரூபமாய்
அவரவர் எண்ணப்படி நிரப்ப ஏலுமோ

******************************************************
ஊறிக்கொண்டே வரும் நினைவுகளை உலர்த்தவும்
மனக்கொடி
நனைத்திடும் அதேபிடி

************************************************************
நீலவானத்துக்குள் நிறைந்த மனமே 
சாம்பல் கண்டு வெம்பாதிரு
நீலமே இயல்பு
நீலமே இருப்பு

***********************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...