செவ்வாய், அக்டோபர் 23, 2018

இறந்தகாலம்

பூத்த முதல் ரோசாவை உனக்கு சூட்டிவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்தாயிற்று
சந்தனப்பொட்டை சரியான வட்டமாக்கியாயிற்று
புலவு செய்கையில் ஞாபகமாக ஒரு கிண்ணம் உன்முன் வைக்க
எந்தப்படத்துக்கு என்ன சொன்னாய்
எந்தப்பாட்டுக்கு அபிநயித்தாய்
எந்த நகைச்சுவைக்கு குலுங்கினாய்
எல்லாம் நினைவிலாட சிரித்து சொல்லிக்கொள்ள முடிகிறது
முடிந்தது தானா என்ற சஞ்சலம் நமது படங்களைப் பார்க்கும்போது வருகையில் நாசூக்காக கண்ணைத் துடைக்கப் பழகிடவேண்டும்
அது கைவந்தால் இறந்தகாலம்
என்பது பொருந்திவிடும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...