திங்கள், அக்டோபர் 15, 2018

ராஜ வாழ்க்கை

துள்ளலின் முணுமுணுப்புகளோடு
தொண்டையில் இறங்கிய
கானபானம் உனது
அப்போது அறியேன்
உன் படையலைப் பருகியே
வாழ்வைக் கொண்டாடுவேன் என
குமிழ்நிறைவுகளின் வண்ணமாக
நாணத்துக்குப்பூசிய செம்மையாக
இடாதுவிட்ட கண்மையாக
ரகசியங்களின் மேலிட்ட காப்பாக
பொறுப்புகளின் கனந்தாங்கும்
உற்ற கையாக
திரளும் கண்ணீரின் உப்பாக
பெருமூச்சுகளைக் கழுவித்துடைக்கும்
துடைப்பானாக
ஒன்றும் வேண்டாமென்றான பொழுதையும்
என்ன பெயரிடுவதெனக் கேட்டபடி கலந்துவிட்ட தயா

ஜூன் 2  2018

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...