திங்கள், அக்டோபர் 15, 2018

குவளையால் நிரம்பும் ஆறு

வலிகளையும் நினைவுகளையும் 
இருபுறமும் இட்டு 
முள்ஆடுகிறது
இப்புறமும் அப்புறமும்
************************************************
எல்லாவற்றையும் ஏற்றிஅனுப்பிவிடலாம்
ஒரே தோணியில்
இந்தக்குவளையால் ஆற்றை நிரப்பியபிறகு

*******************************************************
வயலுக்குச்சென்று வருமுன் 
எழும்பிவிட்ட புதிய சுவரின்முன் 
தவிக்கிறது கிணற்றுத்தவளை
உங்களுக்குப் புதிய நடனம் பிடித்திருக்கிறது

*********************************************************
மரத்தை எடுத்துச்செல்ல 
இயலாப்பறவை
பிரதிசெய்கிறது சுள்ளிக்குச்சியால்
**************************************************************
தற்செயலாக உதிரும்பூக்களைப் 
பார்த்து 
திசைமாறுகிறது காற்று
எட்டித்திருப்புகிறது உன்நிழல்
********************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...