செவ்வாய், அக்டோபர் 23, 2018

இலை தெறிக்கும் குருதி

அந்த வளைவுகளை 
ஒன்றுபோல யார் வரைந்தாரெனக்
 கேட்டுக்கொண்டேயிருப்பேன் நந்தியாவட்டையிடம்
அதென்னவோ 
பாலசந்தர் கதாநாயகியர் போல 
இப்படியும் அப்படியுமாகத் தலையசைக்கும்
***********************************************************************

விளக்கைப்போல 
என்னால் ஏற்றி அமர்த்திவிட முடியவில்லை 
நிலவை
***************************************************************
அனிச்சையாகப் பேசியபடியே 
கிள்ளிப்போட்ட இலைகள் 
குருதி தெறித்திருக்கும்போல
அந்திவானில்
நீ எப்போதும்போல் தான்
சிரிக்கிறாய்

***********************************************************
பூக்குமுன் காய்க்குமுன்
முள் நீண்டுவிடுகிறது
பூக்குமே
காய்க்குமே என்றபடி
கீறலைத் தடவி விட்டுக் கொள்வாயாக

****************************************************************
மண்ணை அளைந்து குழைத்து குழப்பி 
கட்டிய வீட்டுக்கு 
ஒற்றைச்சன்னல் வைக்கலாம் எனத் தோன்றியதும்
திரும்பவும் அளைகிறாள் அபி
அம்மை எழுந்துகொண்டாள்

***************************************************************
எத்தனை பெரிய நிலாவாக இருந்தாலென்ன
உன் வெளிச்சம் உன் அழகு
எடுத்துச்சொல்லிக் கூட்டிவரவேண்டும்
எங்கோ முடங்கிப் போன
நட்சத்திரங்களை
****************************************************************
படம் ராஜி சுவாமிநாதன் 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...