செவ்வாய், அக்டோபர் 23, 2018

என்னில் நான்

கல்லாயிருப்பதும் கருணையோடிருப்பதும்
வெந்து தணிவதும் 
வேறாய்ப் போவதும் 
உடைவதும் 
இறுகுவதும் ஓர் மனமெனில் 
ஒற்றைச்சொல்லில் நிறுப்பதெப்படி


**********************************************************
எண்-ணிடத் தெரியாதவரை
முதல் தரு அறிய மாட்டேன்
சுற்றி சுற்றித்தான் வரவேண்டும் வனத்தை

*************************************************************
என்மேல் என்னைப்பூசிவைத்து
அந்த என்மேல் என்னைச்சுற்றிவைத்து
அந்த என்னையும் உறையிலிட்டு
அதே என்னை எடுத்துவந்தேன்
எந்த என்னோ 
நீ விரும்பிக் கொண்டது
என நான் நினைத்துக் கொண்டது


****************************************************************
படம்: ராமலக்ஷ்மி ராஜன் 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...