ஞாயிறு, அக்டோபர் 14, 2018

பார்வை

எவ்வளவு பிடிக்கும்
எனக்கேட்டு கைவிரித்துக்காட்டிய
வயதிலிருந்து சிலர் வளர்வதேயில்லை
கை எப்போதும் விரிக்கப்பட்டே
....
பாவம்
நீங்களாகப் புரிந்து கொள்கிறீர்கள் 

இரண்டையும் இணைத்து

***************************************************************
மேசை இடுக்குகளில் ஒளிந்துகொண்டு 
மின்விசிறியின் ஒண்டுக்காற்றில் 
சிலிர்க்கும் 
அதைத் தூசி என்று
காலால் எத்தும் உங்களைப்பற்றி
என்ன நினைப்போ


*************************************************************
கண்ணாடிப்பரப்பெலாம்
அழுக்கு
பார்க்க வழியில்லை
மங்கலாவது

 பிம்பமா
பார்வையா
சொல்ல ஒரு குரலுக்காக
காத்திருக்கிறது ஆடி

******************************************    


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...