வியாழன், நவம்பர் 22, 2018

குருவிவால் தேய்பிறையும் வடிவேலுவும்

வாய்ப்பின் அடுத்தபடி
குருவிவால் தேய்பிறைதான் 
இப்போதுதான் தோன்றுகிறது
தொடக்கத்தில் எந்தக்காயை 
நகர்த்தியிருக்க வேண்டுமென்பது
குருவிவாலின் நுனிக்கு 
சற்றுதொலைவில் இருப்பதாக
நினைத்துக்கொண்டிருக்கும்போதே 
இச்சா இனியா...
முடிவுக்கு வந்தாயிற்று

முடிவென்பது தொடக்கந்தானே
இப்போதும் குருவிவால் தேய்பிறை 
வரும்வரை கண்மண் தெரியவில்லை
"எத்தன"
"ஆங் இவுரு பெரிய வடிவேலு"

பேசாம ஐநூற்றுப்பிள்ளையாருக்கு அஞ்சு சிதறுகாய் வேண்டிக்கொண்டுவிடலாமா
ம்ஹூம்....இதுதானென்றால்
இத்தனைமுறை விழுந்திருக்க வேண்டாம்
நாற்றம்பிடித்த குருவிவாலோடு 
கண்ணாமூச்சி ஆடியபடி


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...