சனி, நவம்பர் 03, 2018

சூடிக்கொள்ள நேரமிலா காளி


ஒற்றை மலருக்கு உருகவும் பெருகவும் 
அறியவேயில்லை என்றும்
நிறுக்கவும் தொடுக்கவும் 
நறுக்கவும் நீட்டவுமான
நார்ப்பாடு
சற்று கூப்பாடு
சரங்களைச்சுற்றுகையில் 
உள்பந்தினுள் நுழைத்துவிடுவதுண்டு 
பிடுங்கல்களை
விரித்த பாலிதீன் 
எடுத்த கூடை
எல்லாம் அவளைப்போல 
மன(ண)த்தைக் கட்டிக்கொண்டு அலையாது
இறக்கி விடுவதே வாழ்வு

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...