சனி, நவம்பர் 03, 2018

நினைவில் வளரும் கறிவேப்பிலைச் செடி

கையை மாற்றி மாற்றிப் பற்றிக் கொண்டோம்
சுந்தரி டீச்சர் தொடங்கி 
நெட்டை கீதா குட்டை கீதா
நாங்கள் முதன்முதலில் பார்த்த
தேன்மிட்டாய்காரர் வீட்டு கிளிக்கூண்டு
ஒரு முழத்துக்குமேல் 
எப்போதும் வளராத கறிவேப்பிலைச்செடி

தெப்பக்குளக்கரை வளையல்கடை
கட்டுரைநோட்டு அடுக்கை
சாலைக்கு எதிர்புற வகுப்பறைக்கு 
எடுத்துச்செல்கையில் தவறவிட்டது

ஆச்சே....இருவது வருசம்கிட்ட
......ஒரு வருசம் பேசலாம் நம்ப கதைய 
எனச்சிரித்தபடி நகர்ந்தோம்
அப்புறம்தான் நினைவு வந்தது
வீட்டைச்சொல்லாது விடை பெற்றதும்
அவள் நெற்றித் தழும்பு
இப்போதும் தெரிந்ததும்....


மறந்துவிடாமல் குனிந்து நிலை தாண்டினேன்

அக்டோபர் 14 காமதேனுவில் 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...