சனி, நவம்பர் 03, 2018

வேர் தூர்ந்த செடிகள்


பத்துக்குப்பத்து குப்பத்துக்குடிசை 
உத்திரம் இடிக்கும்போதெல்லாம்
தீபாவளியோ திருவிழாவோ வர ஏங்குகிறான்
தோட்டத்தின்
கயிற்றுக்கட்டிலில்
கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்த
நீலக்கூரை பார்த்த நினைவில்

தயாரிப்பு கைவராது
திருப்பி அனுப்பப்படும் எச்சில் 
ஆலுபரோட்டாவை மெல்லும்போதெல்லாம்
சப்பை மூக்கைத் தடவிக்கொள்பவனின்
நாசிக்குள் ஏறி இறங்குகிறது
மலைக்குடிசையின் புகையும்
முக்காடை இழுத்துவிட்டபடியே
அலட்சியமாக அன்னை தட்டிப்போடும்
ரொட்டிவாடையும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...