வெள்ளி, நவம்பர் 09, 2018

சக்கரம் உருளாப் பாதை

நெஞ்சம் நிரம்பி வழிகிறது 
தாகத்தின் உருவகமாக காலிப்பாத்திரம் 
மட்டுந்தானா 
**************************
விரிந்து நெளிந்து குழைந்து 
குடைந்து ஒடிந்து 
பரவிக் கொண்டேயிருக்கும் வேரை
முத்தியிரா பாவியர் 
நகம் வளர்க்கின்றனர் கிள்ளியெறிய 
*********************************************

திடும் திடும்மென அதிரும் 
இசைத்துளிக்குப்பின் 
ஒற்றைக்கம்பி நாதம் 
வில்லை ஒடித்தாலும் நிற்காது 

*****************************************

ஆறுதல் தேடுகிறது 
ஆறுதல் கொடுக்கிறது 
ஆறுதல் கொள்கிறது 
ஆறுதல் அழிக்கிறது 
ஆறுதல் தங்கா இதயம் 
ரத்தம் நிரம்பியிருக்கிறதா வழிகிறதா 

****************************************************

சிவந்த கொன்றைப்பூக்களை 
உதிராமல் எடுத்துச்செல் 
அன்றி 
உன் சக்கரங்கள் உருளாது 
இப்பாதையைப் பாழாக்கு 
அப்படியே போகட்டும் மிதிபடாது 
அரைபடாது 






கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...