செவ்வாய், மே 15, 2012

நான் பொழிந்த புனல்

மே 14  உயிரோசையில் 

உள்ளங்கை குவித்து
ஏந்தி வந்தேன் 
என் வீட்டுக் கிணற்றுநீர்..
பிரியா விரல்களூடும்
கசிந்த நீர் போக 
மீதம் சொரிந்தேன் 
ஒரு நுரை ததும்பிய 
பேராற்றில் .....
இன்றைய வண்டலில் 
அந்தத் துளிகளைத் தேடித் 
தோண்டிக் கொண்டேயிருக்கிறேன் 
ஒரு ஊற்று....
நானும் புதைந்திருக்கும் 
அதன் மேல் நின்று 
நக அழுக்கு சுட்டி 
சிரிக்கும் 
நீ 
கொண்டிருக்கிறாய் 
புதுப் புனல் நாள் குறித்த 
நம்பிக்கையை...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...