சனி, பிப்ரவரி 05, 2022

வாழ்ந்தா....

 மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும்

பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும்

ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும்
காக்காய்ப்பொன் சரிகைப் பாவாடைகளையும்
சந்தனக்காப்பையும்
பார்த்துக்கொண்டே இருக்கிறாள்

சாலைக்கு அந்தப்பக்க சிறுமாட அங்காளி

கரிந்து அணையும் தன்
ஒற்றை விளக்கில் எண்ணெய் விட இனி அடுத்த செவ்வாயாக வேண்டும்
என்ற அங்கலாய்ப்பு ஓடுகிறது ஒருபக்கம்

வரப்பிரசாதியாகி விடவும் வரம் வேண்டும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...