உளுந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உளுந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 08, 2020

திரிகை மாவு

 எதையெல்லாம் என்னுடையதென்று சொல்வது சுற்றிலும் சுற்றிலும் ஊக்கு சரம் முதல் மணச்சீராய் வந்த பித்தளை அண்டா வரை

என் முகம் பாராது
அதனதன் இருப்பில்
அந்த அண்டா கூடுதலாய்
ஒரு நொடிப்பு நொடித்து
நின்று கொண்டது

என் கேள்வி உணர்ந்து விட்டதோ
*********************************************
எல்லாம் வேறென்ன
இந்த இருளுக்குள்ளேயும்
நான் இருக்கிறேன்
இந்த ஒளிக்குள்ளேயும்
நான் மறைகிறேன்
எப்படியாவது கண்டுபிடி
அல்லது கண்டுகொள்
****************************************
கைப்பிடி கைப்பிடியாகப் பெய்ய
திரிகைக்குள்ளிருந்து
மௌனமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது
உளுந்து
உடைபட்ட துக்கம் சொல்லாது
என்ன
கொஞ்சம் மாவு பறக்கும்
***********************************************

வியாழன், செப்டம்பர் 24, 2020

அம்மாவுக்கு எல்லாம் தெரியும்

 நச்சு நச்சென அம்மியில் தேங்காய்ப் பத்தைகளை நசுக்கும் முன்னரே அம்மாவுக்குத் தெரிந்திருந்தது

அதிலிரண்டு பத்தை
கடைவழியிலேயே
அதாங்க இது
வாழைப்பழமாகத்
தொலைந்திருக்கும் என்று
அளவை ஈடுகட்ட
அதற்குமுன்பே
உளுந்து வறுத்திருந்தாள்

புதன், செப்டம்பர் 23, 2020

கூடக்குறைய

 

பிரகாரத்தில் சில்லுச்சில்லாக
உடையாததற்காக
திட்டு வாங்கும் தேங்காய்
சற்றுமுன் கருவறையில்
ஓரம்தெறிக்கக் கூடாதேயென்று  
பதட்டத்துடன் பார்த்த
ஆள்தானா நீ என்கிறது
தெறித்து விழுகிறது  

சிரட்டைத்தூள் ஒன்று

******************************************************

கூடக்குறைய உளுந்து போட்டு
கூடக்குறைய அரைத்தெடுத்து
கூடக்குறைய புளிக்கவைத்து
கூடக்குறைய தொட்டுக்க வைத்து
அவிகிற இட்டிலி வாழ்க்கையில்
கல்லாய்க் கனக்காவிடில்
புளித்து விரட்டும்
புளித்து விரட்டாவிடில்
வேர்த்து நனையவோ
பாதி ஒட்டவோவாவது
வாய்த்துவிடும்
கூடக்குறைய

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...