சமுத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

பிராயத்தின் குழல்

சமுத்திரக்கரைகள் எப்போதும்போல கிளிஞ்சலுக்குள் சூரியனை அடைக்கப் பார்க்கின்றன

விலாத்தெறிக்க
துடுப்பு தள்ளுகிறான்
மனிதன்
*****************************
எப்படிக் கூப்பிடுவது
நிற்பது அறிந்தும்
நில்லாது போகும்
உன்னை

சற்றே படபடவென்றிருந்திருக்கலாம் உனக்கும்
பாவம் **********************************

பிராயத்தின் காற்றில் மேல்கீழாகப் புரள்கிறது
முன்நெற்றி குழல்கற்றை
ஞாபகங்களோடு
ஒதுக்கிவிட்டுக் கொள்கிறாள்


செவ்வாய், மே 14, 2013

பனிக்கட்டி யானை



சமுத்திரத்திரத்தின் அலைகளில்
தவழ்ந்தும் அமிழ்ந்தும்
சமுத்திரம் தேடும் மீன்.


மகரப்பொன் தூளாகப்
பிறவி கொண்டு
மலரின் மணம்
உணரா சுவாசம் .


நிலவின் வெளிவட்டமும்
அதனோரக் கறையுமாக
இருந்தபடி
வளர்பிறை தேய்பிறை
வழிநடை..


கிளையிருக்கும் துளிரும்
விழுந்திருக்கும் சருகும்
ஒன்றாய் சரசரக்கிறதென்று
சொல்ல உனக்கு எங்ஙனம்
வாய்த்தது ....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...