ப்ரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ப்ரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 05, 2016

பிப்ரவரி பூக்கள் -1

ப்ரியம் பருகி பிரபஞ்சம்
அளவு விரிந்து கிடந்தால்
காதணித் திருகில் 
மடங்கிப்பொருந்துவாயோ
வியக்கிறேன்
அதுவும் முடிகிறது

********************************
புறப்பட்டபோது வழி 
தெரியாதிருந்தது
நீ பார்த்தபின்
கைவிளக்கு 
வழித்திண்ணையில் விட்டுவிட்டேன்

*************************************
என்னுடைய எதற்கும்
நான் அடிமையில்லை
நீயும் சிறகுகளை
உயிரோடு விட்டுவை

***********************************
விலக விரும்பா வாழ்வு
தேடி ரோஜாக்களுடன்
நடக்கிறாள்
கிள்ளியெறிந்த முட்கிளை
காய்ந்து உதிரட்டும்
மறித்து நீட்டாதிரும்

*************************************

செவ்வாய், டிசம்பர் 10, 2013

எங்கே நீயோ

வல்லமையில் நேற்று...
                         9 12 13http://www.vallamai.com/

--பிரியம் சொல்லில் தளும்பல்
உன் ப்ரியம்
கருணை கண்ணில் வழிவது 
பார்வைக்கு அழகு 
பார்ப்பவர்க்கு அழகா ..?
என் ஆன்மாவை 
துடைத்துத் தூபம் காட்டி 
இறுகப் பூட்டிவிட்டேன் 
புற அழுக்கு குறித்த அச்சமென்றாய் ..

அழுக்கு தின்று மூச்சு விடும் 
மீன் அது என்பதை அறியாயோ 
அகவிழி திறந்து ஆன்மாவை 
உலவவிடு... 
தடாகம் முழுக்க துள்ளிப் புரண்டு 
நீந்தும்போதில் 
நீயும் கற்பாய் பிரியமும் கருணையும் 
விரல் வழியும் வழியும் என்பதை...
  

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...