ஈரமணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈரமணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 26, 2019

மே 17

ஈரமணல்
நின்றுகொண்டேயிருக்கிறேன்
குறுகுறுவென ஊறும் பெருமணலும் நுரையும்
சட்டென எக்கணமும்
என் பாதந்தாண்டி உடைநனைத்து
தரையரித்து இழுக்கலாம்
அலை ஏறி ஏறிப்போகிறது
இடமும் வலமுமாக
சற்றே உட்கார்ந்துகொள்ளச்
சொல்கிறது கால்கள்
எப்படியும் நனைக்காமலா போகும்
அடுத்து போகவேண்டியது
மலைமுகடு
ஒற்றைப்பாறை
நாள் நினைவூட்டும்
இழப்புகளுக்காக
கண்ணீரைப்பெருக்க
தோதான இடங்கள்
வேறு எதுவுமிருந்தாலும் சொல்லுங்கள்

செவ்வாய், டிசம்பர் 19, 2017

ஈர மணல்

சிப்பியும் சங்கும் அள்ளி வராதவர் 
காலோடும்
ஒட்டிவந்துவிடுகிறது
ஈரமணல்


*******************************************************
தொலைவதற்கான ஆயத்தம் தேடலாக மாற
தேடலுக்கான ஆயத்தம் 
தொலைதலாகவில்லை
இருக்கிறேன்
இருக்கலாம்

***********************************************************
அழாதே எனச்சொல்லவில்லை
காலையில் அழாதே என்றாய்
பக்கத்து கண்ணாடியில் தற்செயலாக நோக்கிய
அழுவதற்கான காரணங்கள் 
திகைத்து நின்றன

****************************************************************

கிள்ளக்கிள்ள துளிர்க்கும் 
பசலைக்கொடிக்குப் புரிகிற மாதிரி 
ஒருமுறையாவது நன்றிசொல்ல வேண்டும் 
முடிந்து போகுமுன்

*********************************************************************
நேற்று மாலை வெளிச்சத்தைவிட 
இந்தக்காலை வெளிச்சம்
பூரணம் காட்டுகிறது
இடையில் வந்த இருள் 
தள்ளிநின்று சிரிப்பதை 
நான் கேட்க விரும்பவில்லை
பார்க்கவுமில்லை
அட..
அதைத் தெரியவே தெரியாது என்றே வையுங்கள்

*****************************************************************************


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...