பாவனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தலைக்குள் மத்தாப்பூ

 கொஞ்சம் சின்னதுதான் ஆனாலும் ஒரு காகிதக்குல்லாவை தலைமேல் பாவனையாக வைத்திருக்கையில் வந்துவிடுகிறது சற்றே பாப்புவின் சாயல்

இது பாப்புவா நானா என்று கேட்டுக்கொண்டு வராதீர்கள்
அவளுந்தான் பட்டென்று கன்னத்தில் கைவைத்தபடி நானாகிவிடுகிறாள் ******************************************







என்னவோ சொல்லப்போகிறேன்
என்று காத்திருந்துவிட்டு
உதிராத வசவு
தலைக்குள் சுழலச்சுழலப் போனாய் பார்
மத்தாப்பூதான்

உக்கிரத்தின் நதிமூலம்

 சுருள்பொட்டலமாகக் காத்திருக்கும் செம்பருத்தி வெண்ணிலவின் சிரிப்பினைக் காணாதும் பிரதி செய்து விடுகிறது மலர்ச்சியை

உன் உக்கிரம் ஒவ்வொன்றுக்கும்
நதிமூலம் எதுவோ

********************************************
சொப்புச்சாமானில்
பாவனையாகத்
தயாராகிக் கொண்டிருக்கிறது
விருந்து
பாவனையாகச் சாப்பிட்டு முடிக்கும்
விடுதலை நோக்கி காத்திருக்கிறாள் பாப்பு
பாவனையாகச் சமைத்து முடிக்கும்
விடுதலை நோக்கி அம்மா

வியாழன், அக்டோபர் 10, 2019

கசப்பின் உறைகள்

தொட்டியில் வைத்துக் கொஞ்சினாலும்
மணமில்லை
போகன்வில்லாவில்
***************************************************
எழுந்து நடக்கப்போவதான
பாவனை
 சலித்துவிடுகிறது பாதங்களுக்கு
*********************************************
ஒவ்வொரு நாளுக்குமான கசப்பு 
சிறு உறையிலிட்டு கிடக்கிறது
எடுத்துப்போடப்படாத
ஏராளமான உறைகளில் 
ஏதாவதொன்று 
திடீரெனக் கொட்டிவிடுகிறது
**************************************************
பழுப்பைப்பொறுக்கி
பூச்சிநீக்கி
ஆய்ந்து முடித்தால்
அம்பாரம் அம்பாரம்
முருங்கைக்குச்சி
*******************************************
முடிந்த வயதுகளின்
மடிப்பினை மெல்ல நீவுகிறாய்
உள்ளிருந்து உதிர்கிறது ஓர் உலர்பூ
எத்தனைகாலம்
 நீ எடுக்கவில்லையெனச் சொல்லியபடி
***********************************************



புதன், ஆகஸ்ட் 17, 2016

இதுவும் ஜூலைதான்

பௌர்ணமிகள் எல்லாவற்றிலும் நிலா இருக்கிறது
நீ

****************************************************
நழுவும் விரல்மணல்
வழுவழுப்பாயிருக்குமா 
என்ன

***********************************************************
பரபரப்பான பாவனையில்
கடந்துவிட முயல்கிறேன்
இழுத்துப் பிடித்து 
கவனம் சேர்க்காது விடேன்
பிழைத்துப் போவேன்

**************************************************************
திடீரென்று வந்துவிழும்
தீத்துளியைத் தாங்குமளவு
திடமாக இருப்பதில்லை
நீங்கள் வனம் என நினைத்த மனம்
*************************************************************
கிளிஞ்சல் பொறுக்குவது
உனக்கு வேடிக்கை
எனக்குபிழைப்பு
மறைந்துகிடக்கும் கண்ணாடித்துண்டை 
தாண்டிச்செல்வது தொழில்நேர்த்தி
கீறலிலும் கண்ணீர் பெருக்காது
கடல்நீரில் அலசியபடியே
அடுத்த கிளிஞ்சலைத்தேடுவேன்
உனக்கோ அது ரத்தம்

****************************************************************

செவ்வாய், பிப்ரவரி 23, 2016

போலச் சிரிக்குமொரு வாழ்வு

இவ்வளவுதான் என்பது
எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை
இவ்வளவு மட்டுமில்லை என்பதும்
*******************************************************
இறுகமூடிய பிஞ்சுவிரல்களுக்குள்
இருப்பதான பாவனையில் 
மலரவிழும் போதில்
மணப்பதான பாவனையில்
அன்பையும் வைத்திரு
போலச்சிரிக்குமொரு வாழ்வு
******************************************

வலியினடியில்
மிதக்கும் சிரிப்பைத் துழவிக்கொண்டு 
வலியின் கரையோரத்தில்
கதைபேசிக்கொண்டு
எது நீ
எது நான்
******************************************
நீங்கள் சொன்ன பெயர்
மரத்தினுடையதா
பசிய ஒளியோடு
ஆடிக்கொண்டிருந்து விட்டு
இதோ இக்கணம்
உதிரும் இலை
உதிர்த்த கிளை
இரண்டுக்கும் இடையே
இழுபடுவதா
அதனடியில் துளிர்த்துக்
கொண்டிருக்கும் தளிர்
காம்பைப்பற்றியபடி
தன்னுடையது என்றல்லவா சிரிக்கிறது




புதன், ஜனவரி 06, 2016

டிசம்பர் பூக்கள் -2



புன்னகையைப் பார்த்தால்
பதிலுக்குப் புன்னகைக்கவும் இயலாத
சுவர் கல்லிடம் 
பகிருமோ வருத்தம்
********************************

பூவேலை சித்திரங்களோடு
பளிச்சென்ற நிறக்கலவையில்
ஊர்ந்து செல்கிறது
அமரர் ரதம்.
பணி முடிந்தது.
*************************************
கேட்காத பொழுதுகளிலும்
இசை ஒலித்துக்கொண்டே
இருக்கிறது
கேட்பதான பாவனைகளின் சுமையற்று
*****************************************
மறதியை நம்பியிருக்கிறது
காதல்
மறதியை நம்பியிருக்கிறது
பாசம்
மறதியை நம்பியிருக்கிறது
அன்பு
மறதியை நம்பியிருக்கிறது
அரசியல்
மறதியை நம்பியிருக்கிறது
கோபம்
நீ ஏன் நினைவாற்றல் பற்றிக் கவலை கொள்கிறாய்
மறக்கத்தெரிந்தால்
பிழைக்கத்தெரிந்தது போல்தான்
***********************************************
அவசரமாக செல்லவேண்டியிருக்கிறது
சின்னதுதானே என்று சொல்லிவைத்த
பொய்
பொய்தானென்று
நீ கண்டுவிட்டாயோ
இல்லைதானென்றால்
சொல்லித்தொலை
இன்னும் உனக்குப் புலப்படவில்லையென
********************************************
பார்த்தேன்
பார்த்தேன்
பின்னும் பார்த்தேன்
ஒன்றுமில்லை
நீ பார்த்த 
அதுவே என்று
ஒப்புக்கொண்டு நகர்ந்தேன்
நிம்மதி
உனக்கென்று தோன்றினாலும்...
பின்னும் பார்ப்பேன்
நீ
பாரா கணத்தில்
************************************
காற்றின் எதிர்த்திசையில்
புறப்பட்டது
ஒளிக்கீற்று
குவிந்தகரங்கள் காக்க
**********************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...