தக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 22, 2013

வரம் மறந்த கடவுளும் ஒரு யாசகியும்


"இப்படியாக இரு "
உன் வலது உள்ளங்கை
உயர்கையில்
உரத்துச் சொன்னாயோ...
முணுமுணுத்தாயோ.....
நான்
இப்படித்தான் இருக்கிறேன்.
நீ சொன்ன :இப்படி"
இதுதானா?
நெற்றி வியர்வையாய்
சுரந்து பெருகிய
சலிப்பின் துளிகளை
வழித்து ..வழித்து ..
அந்தரத்தில் எறிந்துவிட்டு
இப்படியாகவே-இருக்கிறேன்...
சலிப்பு பெருகி..பெருகி
சூழ்ந்த நீர்ப்பரப்பின்
மேலொரு தக்கையாகவும்
நான்
இப்படித்தான் இருக்கிறேன்..
உன் வரம்
உனக்காவது நினைவில் இருந்திருக்கலாம்
.

சனி, செப்டம்பர் 29, 2012

விலங்கியலார் கவனத்திற்கு

மீள் பகிர்வு 

சிறகிருப்பதாக                                               
சொல்லியிருந்தார்கள்
அதனால்
தான் பறவையாய்இருக்கலாம்
என நினைத்தது .
ஒருநாள்
இறகுகளால் கோர்த்த
சிறகைக்காணோம்
கல்லாய் இறுகிய
பாறை இருந்தது ....
சமயத்தில்
பறக்க முடிகிறதே என
பரிசோதித்தபோது
சக்கைகள் சேர்ந்த
தக்கை தெரிந்தது ....
வளர்ச்சியா?
மாற்றமா?
வளர்சிதைமாற்றமா?

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

வலி பற்றிய கதைகள்...

10 9 12  உயிரோசை இணைய வார இதழில் வெளியானது


வலியின் திரவம் 
வழிந்தோடியது...

காய்ந்த கோடுகளின் 
அடையாளம் 
வரி வரியாய்ப் படிந்திட 
வலியின் கதைகளைப் பேசியபடி 
பொழுதுகள் விடிகின்றன...
முடிகின்றன..

நேற்றைய வலியோ ,இன்றையதோ...
சென்ற வருடத்தையதோ..
உன்னுடையதோ,என்னுடையதோ...
சொல்லிக்கொள்ள,
வியக்க,ஒப்பிட...
வலிகள் ஏராளமாய்!

வலி பிழிந்த நொடிக்குத் 
தொடர்பிலாது 
தக்கைச் சொற்களாய் மிதக்கின்றன 
வலி பற்றிய கதைகள்  -

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...