வெறுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெறுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 05, 2022

வேம்பின் பூங்கொத்து

 அத்தனை வெறுப்பு பொங்கும் மனசோடு எப்படி ஒரு புன்னகை என்றேன்

வேம்பின் பூங்கொத்து
அத்தனை அழகில்லையா எனப்
பேச்சை மாற்றுகிறாய்

*********************************************************
கைவிடுவதற்கென்று
ஒன்றும் இல்லாத
இடத்திலிருந்து பெயர்ந்தபோதும்
நினைவைச்
சுரண்டும் வெறுமை
மனசாட்சி சனியனிடம்
எதையும் கேட்டு வைக்க வேண்டாம்
உருண்டு புரண்டு சிரித்து வைக்கும்
அப்புறம் அது துப்பிய எச்சிலை
அவசரமாகத் துடைத்துக்கொண்டு
அசட்டுச்சிரிப்பு வேறு சிரிப்பீர்கள்

புதன், ஏப்ரல் 10, 2019

கண்ணே கலைமானே

இனிதானே கிளம்பப் போகிறாய்
என்னவாம்
சிடுசிடுப்பா
சரி நான் இங்கு இல்லை
நீ அங்கேயே இருந்துவிடு
இந்த இடம் இப்படியே இருக்கட்டும்
சில்லென
**************************************************
ஒளிஇறைந்த பாதையில்
நடந்தபோதும் உதறிக்கொண்டாய் கால்களை
சொற்களிலிருந்து தெறித்த 
பூச்சிபுழுக்களை 
மிதித்தாயா என்ன

**************************************************************

கனவென்று சொல்வதற்கில்லை
நனவென்றும் சொல்ல முடியாததை
கனவென்றாவது சொல்லலாமோ
********************************************


வெறுப்பு சொட்டிய சொற்களை 
நீ வாரியிறைத்தபோது
எங்கிருந்தோ 
கண்ணே கலைமானே ஒலித்துக் கொண்டிருந்தது
உன்னை 
,உன் சொற்களைப்
புறக்கணித்திடும்
வரிசையில்
கண்ணே கலைமானே'வையுமா...
************************************************





வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...