குடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 27, 2021

கடவுளின் குட்டிக்கரணம்

 தன்னியல்பில்

உள்முற்றத்தில் கால்நீட்டிக்கொண்டு

தூத்தல் ' வலுக்கும்வரை
உட்கார முடியும்
ஆளிருக்கும் வேளைகளில்
அதற்குமேல்
என்றால்
மறந்தாற்போல
குடையை விட்டுக் கிளம்பு
******************************************
கிழக்கிருந்து சற்றே சாய்வாக
விழும் தாரைகளின் ஊடே
மின்கம்பியைப்பற்றிக்கொண்டு
ஒரு குட்டிக்கரணமிட்டுவிட்டு
சர்ரென சகதிக்குள் இறங்குகிறான் கடவுள்
கதவடிக்குள் நின்றிருக்கும் எனைப்பார்த்து அவன்
கையசைக்கும் தருணம்
ஒன்றும் புரியாமல் "பார்த்து பத்திரம்" என்கிறேன் ******************************************
காணாமற்போனதாக
நினைத்திருந்த
ஒரு சிறுபெட்டி
இன்று கையில் தட்டுப்பட்டது
அலமாரியில் இவ்வளவு ஆழமான ஓரம் இருந்திருக்கிறதா
திறக்காமலே மீண்டும் அங்கேயே அதை
வைத்துவிடலாம்
சின்னச்சின்னதாக
எதெதுவோ
அதற்குள் இருக்கிறது என்றும்
எல்லாமாகக்
காணவில்லை என்றும் நினைத்திருந்தேன்
அதில் ஒன்று இல்லையென்றாலும்
வேறு எங்கு போனதென்று யோசிக்க வேண்டாம்

புதன், அக்டோபர் 07, 2020

காணாமற்போன மயிலிறகு

 முதல் வகுப்பிலிருந்து அவனுக்கு இதுதான் நடக்கிறது குட்டிபோடும் என ஒற்றை மயிலிறகை ஒளித்து வைப்பதும் முதலைப் பறிகொடுப்பதும் ***********************************************

தடும் திடுமென இடித்துவிட்டு
ஒரு தூறல் கூடப்போடாமல்
ஓடிப்போகிற மேகங்களை
அண்ணாந்து பார்த்து
ஒன்றும் நடக்காதது போல நகரும் அளவு
பக்குவப்பட்டு விட்டாயிற்று
எச்சரிக்கையாக எடுத்துவைத்துக்கொண்ட குடை பற்றி
எதற்கு புலம்பல் **************************************

பாலில்லாமல் சர்க்கரையில்லாமல் வாடையேறிய வெந்நீரைக் குடித்து வாழலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிறகு உன் முகந்திருப்பல்

ஒன்றும் செய்யப்போவதில்லை
**************************************************

தட்டுத்தடுமாறி
அங்கே பிடித்து
இங்கே தாங்கியே
நடந்து
பழகிவிட்டதா
முதுகெலும்பு நேராய் நிற்பதே
பிரமிப்பாகி விடுகிறது ************************************************

புன்னகையோடு கடந்தபோது
நம்மைப்பார்த்து
என்றே
நம்பிய வினை
விதைக்காத குழிகளுக்கு
மாங்கு மாங்கென
நீரிறைக்கும் வேலை பிறகென்ன
இறைத்துச்சிவந்த கரமும்
கசிந்த கண்ணுமாக...
காத்திருங்கள்


புதன், அக்டோபர் 26, 2016

பெயரில் என்ன இருக்கிறது

குடை என்பது நிழல்
நிழல் என்பது குளிர்ச்சி
குடை என்பது காப்பு
வீழ்ந்த வெண்கொற்றக்குடைகளையும்
காக்க மறந்த குடைகளையும்
காற்றோடு பறந்த குடைகளையும்
நினைவூட்டுகிறதே
இதற்கு ஏனம்மா குடைமிளகாய்
எனப்பெயர்
அது...அது...ஆங்
அது குடைமிளகாயில்லை
குடமிளகாய் குடமிளகாய்
பதிலில் தொடங்கியது கேள்வி
குடம் நீர் நிரப்பிவைப்பது
நீர் தண்மை மிக்கது
தன்மையெலாம் சரிய
நீரிலாது ஆடும் குடங்களையும்
அடித்துக்கொள்ளும் குடங்களையும் 
நினைவூட்டுகிறதே
இதற்கு ஏனம்மா குடமிளகாய் எனப்பெயர்
போடா
குடையுமில்லை குடமுமில்லை
இது கேப்சிகம்
Capsicum

ஞாயிறு, நவம்பர் 08, 2015

குடை என்ற குறியீடு

மழை என்னை விரி என்றது
இருள் என்னை விளி என்றது
நான் முந்தி
நீ முந்தி
ஒரு துயரப்பாடலை
இடை நிறுத்திவிட்டு திடீரென
பெருங்குரலெடுக்கிறது காற்று
முகம் தெரியாதிருப்பதை எண்ணி
சிலிர்த்துக் கொள்கிறது
வேலியோரச் சிறுகொடி
பற்றிக்கொள்ளாமல் விட்டுவிட்ட
குடை
ஆனந்தமாகத் தாவிவட்டமிட்டு
தலைகீழாக மிதக்கிறது
அந்தக்குடைக்குவண்ணமில்லை
மின்னல் அது குடைஎனச் சொல்லியது
அவ்வளவே
உரிமைகோராசுதந்திரத்தின் கீற்று
அத்துணைஅழகாய்இருந்தது
யாரும்எனதென்று
சொல்லிவிடும்முன் நகர்ந்துவிடல்நலம்
நானோ
குடையோ

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...