கற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 30, 2013

சருகு துளிர்க்கும்



சந்தேகங்கள்
எல்லா நேரங்களிலும்
தீர்ந்துவிடுவதில்லை..


முயற்சிகளில்
உதிர்ந்து கொண்டே இருக்கின்றன
ஞான வனத்தின் பழுத்த இலைகள் ...


அவை சருகாகி
அலைக்கழிவதும்,மிதிபடுவதும்
ஆமோதிப்பின் தலையசைப்புகளாய்
மொழிபெயர்க்கப்படுகின்றன ....


அண்ணாந்து கொண்டிருக்கும்
நீ
துளிர் தரிசனத்தில் ...
நான்

சருகைப் பெருக்கியபடி ....

நீரோடை மட்டும்
எப்போதுமே சுழித்தோடுகிறது...
குமிழிடும் வட்டம்
அமிழ்த்திக் கொள்ளும் நாள் வரை
நாம்
சருகோ..தளிரோ...

துளிர்க்கவோ...... உதிரவோ .....


செவ்வாய், மார்ச் 05, 2013

இங்கும் வருகிறாளா ?


உதயம் உவப்பாய்த்தான்
தொடங்குகிறது....
உன் கருணையின் ரேகை போல்
இதமான உஷ்ணமும்
ஆரஞ்சு வெளிச்சச்சிதறலுமாய் .....!

நேரப் பந்தயத்தை
நிறுத்தி
முள்ஒடித்துப் போடேன் ..

காம்போடு விடைகொண்டு
தூசுபோல்
காற்றின் திசையில் -
மலர் திரிந்து மிதந்து அலைகிறது .....
ஒற்றை இதழின்
 நடுக்கம் போதாதா
 உன் உறக்கம் கெட

இற்றுப் போவதன் வலி அறியாமல்
என்ன பரிபாலனமோ ....

வெள்ளி, பிப்ரவரி 22, 2013

அபி உலகம் -15


வாசல் வேம்பு வந்த கதை...
நீ வளத்தியா தாத்தா...?
தொட்டி ரோஜா 

தன சொப்பு நீரால் வளர்க்கும்
அபியிடம் எப்படிச் சொல்வது...?
"காக்கா போட்ட விதைம்மா..."
ஏன் போட்டுச்சு..?
வேப்பம் பழம் சாப்ப்ட்டுச்சா..அதான்..
அப்போ ஆப்பிள் குடுத்திருக்கலாம்ம்ம்ல ...
ம்ம்ம்ம் விழுந்த
நேரம் தாத்தாவும் நினைத்தார்
ஆப்பிள் மரம் பால்கனியில்
நீட்டும் கனியை...
***********************************
பாட்டியிடம் திருடிய வடையைக்
காகம் தவற விட்டால்
வடைமரம் முளைக்குமா...?

நூடுல்ஸ் எதில் காய்க்கும்..?

சாக்லேட் காயா பழமா...?
அபியின் கேள்விகளுக்கு
விடை அறிந்தால்
தாத்தாவைத் தொடர்பு கொள்ளுங்கள்...



வியாழன், பிப்ரவரி 21, 2013

அபி உலகம் -14




அபி கடல் பார்த்தாள் ..
"எவ்ளோ ஓஓஓஓ  ...தண்ணி...
யாரும்மா..ஊத்தினா...."
"ம்ம்ம் ...கடவுள்..."
"நீயும் அவங்கம்மா
மாதிரி இருக்கலாம்மா..."
டம்ளர் தண்ணீர்
கவிழ்த்தாலே குட்டு வாங்கும்
குட்டிக் கடவுளின் ஆதங்கம்...
****************************
கவனமாய்
முள் நீக்குகிறாள் அம்மா .
ஏன்மா..?
தொண்டையிலே மாட்டிக்கும் அபி.....
மாட்டிக்கிட்டா..
ம்ம்ம்ம் ..செத்துப்போய்டுவோம்..
எரிச்சல் தொனியில்
இன்னொரு கவளமும்
இன்னொரு நிமிடமும்
கடந்தபின் ...
"இந்த மீனோட அம்மா
இத சொல்லவே இல்லியாம்மா 
உன்ன மாதிரி..."
துண்டு மீன் தட்டில்
துள்ளியது மாதிரி இருந்தது !

திங்கள், ஜனவரி 21, 2013

ஜகன்மோகினி



நான்...
அனாமிகா...
வினோதினி...
தாட்சாயணி...
என் விரிசடையோ .
மூன்றாம் நேத்ரமோ ,
தோள் தொடும் தூக்கிய திருவடியோ
கை ஏந்திய எரிதழலோ,
காணவியலாக் கண்முன்னே
தலையாட்டி பொம்மைகள்
உருண்டு கொண்டிருக்கின்றன !
உருப் பெறும்
சாபவிமோசனம்
எப்போது -உன் கண்ணுக்கு?

சனி, ஜனவரி 05, 2013

நுழையா விருந்து




தேநீர்ப் பித்து
குளம்பி பக்தி
பால்மாப் பாலகர்
எல்லோருக்குமென
எடுத்தெடுத்து வைத்த
உறைபிரிக்காக் கோப்பைகளுக்குத்
துணை
சேர்த்துக் கொண்டேயிருக்கிறேன்
என்றேனும் பரிமாறும்
நம்பிக்கையில்..,
உன் புன்னகையில் தெரியும்
இகழ்ச்சி
என் கண்ணுக்கு தெரியும் .
என் விதைகள்
முளைவிடும் என்பதையோ
நீயும் உன் புன்னகையும்
அறிவதில்லை...

சனி, டிசம்பர் 22, 2012

அபி உலகம் -11




வாசல் வேம்பு
வந்த கதை கேட்டாள் அபி
'காக்கா ,ஒரு வேப்பம்பழம்
சாப்டுச்சாம் ...
ம் ...
அந்த வெதைய  நம்ம வீட்டு
வாசல்ல போட்டுச்சாம் ..                                     
ம்ம்
அதுதான் வளர்ந்து மரமாச்சாம்..."
கையிலிருந்த ஆப்பிளோடு
காகத்துக்காகக் காத்திருக்கிறாள் அபி.
**********************
நூடுல்ஸ் காய்ப்பது
செடியிலா,மரத்திலா..
சாக்லேட்  காயா,பழமா...
காக்காய் பாட்டியிடம் திருடும்
வடை கீழே விழுந்தால்
வடை மரம் முளைக்குமா ?
அபியின் கேள்விகளோடு
விழித்திருக்கும் தாத்தாவுக்கு
கொஞ்சம் கைகொடுங்களேன் ....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...