நீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 09, 2019

நினைக்கத் தெரிந்த மனமே

இன்னும் இதெல்லாம் தெரியாதா
என்ற கேள்வியைப் 
பூங்கொத்துபோலத் தலையசைத்துப் 
பெற்றுக்கொள்ளுங்கள்
நன்றி சொல்லுங்கள்
அதுதான் எதிர்மரியாதை
*******************************************
நீதானே சொன்னாய்
கேட்குமுன் ஒருதயக்கம்
வந்துவிட்டதா
வரட்டும்
நான் என்பது நீயாகவே இருந்த நாளில் 
சொன்னதை
எப்படி அப்படிக் கேட்பது

***************************************************
உணர்ச்சிபூர்வமாகப் பேசுவது 
இப்போது நாகரிக நடைமுறையில்லையாம்
குறிப்பாக
வலிகளை
வருத்தத்தை
நன்றியை
மறதியை...

ஆங்
நினைக்கத்தெரிந்த மனமே
பாட்டு ரொம்ப பழசாகிவிட்டது

***********************************************************
உன்னோடான பிணக்கு
எப்போது தீரும்
எப்படி எங்கே...
அதற்குள் என்னோடான
என் பிணக்காவது தீர்ந்தால் நல்லது



வியாழன், ஆகஸ்ட் 15, 2013

நாம் நான் நீ

 நட்சத்திரங்களைப்  பறிக்கத்
திட்டமிட்டவாறே
சாய்வு நாற்காலியில்
முன்னும் பின்னும் ஆடியவன்
சொல்லிக் கொண்டிருக்கிறான்
இப்போதெல்லாம்
நட்சத்திரங்கள் வெகுதொலைவு
சென்றுவிட்டதாக...


கைப்பிடி செம்மண்ணும்
அகழாமல் விதைத்துவிட்டு 
முளையாப்பயிரின் ரகம்
குறித்த புகாரோடு
அதோ
மோட்டார் சைக்கிளில் விரைபவன்
உங்களோடுதான் தேநீர் பருகினான்...


கனவுகளை விற்பவன்
வாராவாரம் பொதியையோ
அட்டையையோ வடிவையோ
மாற்றுவது வழக்கம்
எனத் துப்பறிந்தவாறே
இவ்வார இலவசம்
என்ன என்றேன் நான்..

புதன், பிப்ரவரி 20, 2013

சுயம் ...சுலபம்...




நானற்ற "நான்"ஆக
நான் இருந்தாலும்
"நீ"யற்ற  நீ
என்னுள் நிறைந்தாலும்
நான் நானாக இருத்தலும்
நீ நீயாக இருத்தலுமே
நாம்......

பால்வெளியின் சொற்களில்
"நீ" நான் ஆவதில்லை...
நான் "நீ" ஆவதில்லை
நான்-
நான் என்பது- என்னை !
"நீ""நான்" என்பது
உன்னை!

"நீ"யும் "நான்"உம
உலகு
சுலபமாகச் சுட்ட ஏதுவாக
"நாம்"....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...