manasu kadavul vaaippu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
manasu kadavul vaaippu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 13, 2012

கறை படிந்த பாய்

 

மே 14  வல்லமையில்

இடுப்பு தரிக்கா காற்சட்டைக்கு 
அரைஞாண் கயிறுக்
காப்பு..
முறுக்குவாளியில்
மட்டுமன்றி 
கடுகுடப்பி சில்லறையிலும் 
வைத்திருப்பாய் என் தீனி...
பால்காசு,
பயிறெடுப்பு...
உன் 
எல்லா வரவிலும் 
என் செலவு...
அழுக்குப் படிந்த 
உன் மஞ்சள் கயிறு 
நினைவிலாடுகிறது 
இந்த அடையாள அட்டையை 
தொங்கவிடும்தோறும்.....
வெடிப்புகளுக்கு இட்ட 
மஞ்சள் விளக்கெண்ணையால் 
கறை படிந்து போன 
உன் பாயைப் பார்ப்பதுண்டு 
அம்மா 
அந்தி வானத்தின் நிறக்கலவையில்...  

வியாழன், மே 03, 2012

பயண வழியில்.....

  ஏப்ரல்30 உயிரோசையில் வெளியானது

 
ஓடத்தின்
நுனிப்பறவையாகவும்.,

நீர்விழு நிழலாகவும், 

தூரவானின் சாட்சிப் பறவைகளாகவும் ,

தொடாது போகும் மேகமாகவும் ,

தொங்கும்

கூண்டு விளக்காகவும்,

 அதனுள்ளிருக்கும்

 துளி ஒளியாகவும் ,

ஓட வளைவாகவும்,

நீர் கிழிக்கும் துடுப்பாகவும்,

 ஓடா நீல அலையாகவும்,

 எவ்வெப்போதோ

 நான் இருந்திருக்கிறேன்.....

ஓடத்தினுள்
சாய்ந்திருந்த நினைவு மட்டும் இல்லை...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...