ரவிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரவிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 13, 2022

உடன் நடக்கும் வயது

 முக்கியம் முக்கியம் எனச் சேர்த்தவற்றுக்குள்

எங்கோ இருக்கிறது
நண்பனின் வாழ்த்து அட்டை
ஆத்தாவின் புடவைத்துண்டு
எனாமல் பதித்த ஒற்றைக் கொலுசு
பழைய நகைக்கடை டப்பாவிற்குள்
தாலிபிரித்துக்கோர்த்த கயிறு
சிங்கப்பூர் மாமா கொடுத்த நாணயம்
அஞ்சல்வில்லைகளை ஒட்டி ஒட்டிப் புடைத்த பழைய நோட்டு....
இப்படியே வைத்துக்கொள்ள
எத்தனை நாள் வாய்க்குமோ
அதுவரை உடன் நடக்கும் வயது
உங்கள் வயது உங்களுடன் நடக்கிறதா *************************************************
ஏறுமாறான அளவுகளில்
வந்துவிட்ட ரவிக்கைக்கென
ஊக்குகள் தொங்கும் கறுத்த மஞ்சள்கயிற்றில்
முடிச்சிட்ட விரலி மஞ்சளும்
எப்போது வேண்டுமானாலும் உதிரலாம்
புடவை புதிதுதான்
பார்த்துப்பார்த்து வாங்கிய எவளோ
நனைத்தவுடன் நிறம் குழம்பிப்போகும்படி
சாயம் தோய்த்தவனை வாழ்த்தியபடி கொசுவத்தை நீவி நீவிக்
கட்டிக்கொள்கிறாள்
மனசைச் செல்லமாகக் கண்டித்தும் வைக்கிறாள்
இதுக்கெல்லாம் சந்தோஷப்பட்டுக்காதே என்று

புதன், ஏப்ரல் 08, 2020

காந்திமதியின் சொத்து

அடகுக்கடை
ரசீதுகளை மடித்து ஒடுக்கிய
உள்ளூர் நகைக்கடை பெயரழிந்த நைந்த
மணிபர்ஸ்
காந்திமதியின் மாபெரும் சொத்து
அரிசிபருப்பு 
அஞ்சரைப் பெட்டியெல்லாம் 
அலசி எடுத்துவிட
டாஸ்மாக் தந்திரங்களைப் 
பயின்ற கணவனால்
எப்போதும் வியர்வையில் ஊறிய 
ரவிக்கைக்குள் அடைகாப்பாள் 
இல்லப் பொருளாதாரம்
சாகாவரம் பெற்ற
வறுமைக்குப் புட்டிப்பால் 
அவள் சுண்டியெறிந்த கண்ணீர்
சிரித்தபடியே 
இறுக்கிக்கட்டும் துடைப்பத்துக்கு 
அவள் வாழ்வின் குப்பைகளைக் 
கூட்டியெறியத் தெரியவில்லை
காந்திமதி கேட்கிறாள்
கட்டி கட்டியா நவ( நகை) போட்டுக்கிட்டு வாராவளே 
அவங்க ஊட்டுல தங்கம் காய்க்குமா

ஞாயிறு, மே 05, 2019

நின்றுகொண்டு வருபவள்

இந்த நாளிலும் 
சலனமற்ற முகங்கள்
அமர்ந்திருக்கின்றன
படியில் தொங்குகிறவன் 
வழக்கம்போல் ஓடிவருகிறான்
உயரக்கம்பியைக் 
கை தூக்கிப் பிடித்துக் கொள்கிறாள் அவள்
சாயமிழந்த
அடுத்தமுறை அணிகையில் 

நிச்சயம் கிழியப்போகிற
வெக்கையால் 

வியர்வை பொங்கிக்கிடக்கும் 
அந்த ரவிக்கை இடுக்கிலும் 
என்னவோ தெரிகிறது சிலருக்கு

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

ரோஸ் கவுன்

ஒருநாளும் வாய்க்கவில்லை
அவள்போல ரோஸ் கவுனில் சுழன்றாட
பார்த்துவிட்டு வந்தவுடன் 
குழம்பு சுடவைத்து 
தோசை வார்த்த மும்முரத்தில் மறந்தாலும் 
கனவில் நினைவு வரும் 
ஒரு காலத்தில்
அதே ரோஸ் இல்லையென்றாலும் 
அதன் சாயலில் ஒரு ரவிக்கைத்துணி 
எடுத்தபோது ஏனோ நினைவிலேயே 
நினைவு வந்தது 

இப்போது சுற்றினால் தலை சுற்றும் என
சிரித்துக்கொண்டாள்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...