பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 13, 2021

துளிர்ப்பு

 


ஒரு விம்மலோடுதான்

வரவேற்றிருக்க வேண்டும்
ஆனால்
சின்னப்புன்னகை நெளிந்தது
தன்னை மீறிய வேகத்தில்
எழுந்து நிற்கிறாள்

இவ்வளவுக்குப் பிறகும்
அரிசிப்பையும்
வெல்லம் முந்திரிப் பொட்டலங்களுமாக
வந்துநிற்கும் மைத்துனன்
சுவரில் சார்த்திய கரும்பினால்
தன்னையே நாலு போட்டது போல
நெளிகிறான்
மறுவீடு போனபோது முறுக்கிவந்த மாப்பிள்ளை

என்ன பேசுவதென்று
வந்தவரும் நின்றவரும் திக்கிக் கொண்டிருக்கையில்
ஐ...கரும்பு எனத்தூக்கும்
அண்டைவீட்டுச் சிறுவன்
உடைக்கிறான
பனிப்பாளத்தை

தன்வீட்டு ரேஷன் அட்டையிலிருந்து 
தன்பெயரை அழிக்கும் வல்லமை  
சுடுசொல்லுக்கு இல்லையென்றானதில்
பொங்குகிறது அவள் கண்

ஞாயிறு, ஜனவரி 13, 2013

ஒளியே வாழி!



ஒளியில் தொடங்குகிறது நாள்..
ஒளியில் தொடங்குகிறது உற்சாகம்
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில் நம்மை
இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின்
சக்தியை
கண்டபோது ..தொடங்கியது
மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன
பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று
வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...